حَدَّثَنَا ابْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا الْفَزَارِيُّ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، قَالَ حَدَّثَنِي ثَابِتٌ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى شَيْخًا يُهَادَى بَيْنَ ابْنَيْهِ قَالَ " مَا بَالُ هَذَا ". قَالُوا نَذَرَ أَنْ يَمْشِيَ. قَالَ " إِنَّ اللَّهَ عَنْ تَعْذِيبِ هَذَا نَفْسَهُ لَغَنِيٌّ ". وَأَمَرَهُ أَنْ يَرْكَبَ.
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள், ஒரு முதியவர் தம் இரு மகன்களின் துணையுடன் நடந்து செல்வதைக் கண்டார்கள்; அவரைப் பற்றிக் கேட்டார்கள். அதற்கு மக்கள், ‘இவர் (கஅபா வரை) நடைப் பயணமாகச் செல்வதாக நேர்ச்சை செய்திருக்கிறார்’ என்று தெரிவித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்த முதியவர் தம்மைத் தாமே இவ்வாறு வருத்திக்கொள்வது அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை” என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு கட்டளையிட்டார்கள்.
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு வயதான மனிதர் தனது இரு மகன்களுக்கு இடையில் தாங்கப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டார்கள். அவர்கள் (நபி (ஸல்) அவர்கள்) கேட்டார்கள்: அவருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் கூறினார்கள்: அவர் (கஅபாவிற்கு) கால்நடையாக நடந்து செல்வதாக நேர்ச்சை செய்திருந்தார். அதன் பிறகு அவர்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்) கூறினார்கள்: அல்லாஹ், அவர் தம்மைத்தாமே வருத்திக்கொள்வதை விட்டும் தேவையற்றவனாக இருக்கிறான், மேலும் அவரை சவாரி செய்யுமாறு கட்டளையிட்டார்கள்.