அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் ஒரு முஸ்லிம் அடிமையை விடுதலை செய்கிறாரோ, அல்லாஹ் (அந்த அடிமையின்) ஒவ்வொரு உறுப்புக்கும் பகரமாக இவருடைய ஒவ்வொரு உறுப்பையும் நரகத்திலிருந்து விடுவிப்பான்; (அந்த அடிமையின்) அந்தரங்க உறுப்புக்கு(ப் பகரமாக) இவருடைய அந்தரங்க உறுப்பையும் கூட (நரகத்திலிருந்து விடுவிப்பான்)."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:
யார் ஓர் அடிமையை விடுதலை செய்கிறாரோ, அந்த அடிமையின் ஒவ்வொரு உறுப்புக்காகவும், (விடுதலை செய்த) இவருடைய ஓர் உறுப்பை அல்லாஹ் நரகத்திலிருந்து விடுதலை செய்வான். இவருடைய அந்தரங்க உறுப்பை, (அடிமையின்) அந்தரங்க உறுப்புக்கு ஈடாக (நரகத்திலிருந்து விடுதலை செய்வான்).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: எவர் ஒரு இறைநம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்கிறாரோ, அல்லாஹ், அந்த அடிமையின் ஒவ்வொரு உறுப்புக்கு ஈடாக, அவரின் (விடுதலை செய்தவரின்) ஒவ்வொரு உறுப்பையும், அந்த அடிமையின் அந்தரங்க உறுப்புக்கு ஈடாக, அவரின் (விடுதலை செய்தவரின்) அந்தரங்க உறுப்பைக்கூட நரக நெருப்பிலிருந்து விடுதலை செய்வான்.