இஸாம் அல்-முஸனீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை ஒரு சரிய்யாவில் (சிறிய படைப்பிரிவில்) அனுப்பி வைத்து (எங்களிடம்) கூறினார்கள்: நீங்கள் ஒரு மஸ்ஜிதைக் கண்டாலோ அல்லது ஒரு முஅத்தின் (பாங்கு சொல்பவர்) கூறுவதைக் கேட்டாலோ, யாரையும் கொல்லாதீர்கள் (ஏனெனில் அது முஸ்லிம்கள் வாழும் பகுதி என்பதற்கான அடையாளம்).