ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய ஹஜ்ஜை விவரித்தபோது கூறினார்கள்:
நாங்கள் (உம்ராவை முடித்து) இஹ்ராமிலிருந்து விடுபட்டபோது, பலிப்பிராணியை அறுக்குமாறும், அப்பலிப்பிராணியில் எங்களில் ஒரு குழுவினர் கூட்டு சேருமாறும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அவர்கள் தமது ஹஜ்ஜிலிருந்து (உம்ராவை முடித்தபின்) இஹ்ராமைக் களைந்துவிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்ட சமயத்தில்தான் இது நிகழ்ந்தது.