இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5408ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي جَعْفَرُ بْنُ عَمْرِو بْنِ أُمَيَّةَ، أَنَّ أَبَاهُ، عَمْرَو بْنَ أُمَيَّةَ أَخْبَرَهُ أَنَّهُ، رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم يَحْتَزُّ مِنْ كَتِفِ شَاةٍ فِي يَدِهِ، فَدُعِيَ إِلَى الصَّلاَةِ فَأَلْقَاهَا وَالسِّكِّينَ الَّتِي يَحْتَزُّ بِهَا، ثُمَّ قَامَ فَصَلَّى، وَلَمْ يَتَوَضَّأْ‏.‏
அம்ர் பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“நபி (ஸல்) அவர்கள் ஆட்டு இறைச்சியின் புயப்பகுதியைத் தம் கையில் வைத்து வெட்டிக் கொண்டிருப்பதை நான் கண்டேன். அப்போது அவர்கள் தொழுகைக்காக அழைக்கப்பட்டார்கள். உடனே அவர்கள் அதையும், தாம் வெட்டிக் கொண்டிருந்த கத்தியையும் கீழே போட்டுவிட்டு, பின்னர் எழுந்து தொழுதார்கள். அவர்கள் (இதற்காகப் புதிதாக) உளூச் செய்யவில்லை.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح