அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எவரொருவர் தம் கையில் (உணவுப் பொருள் அல்லது) மாமிச வாடையுடன் (கழுவாமல்) இரவைக் கழிக்கிறாரோ, அவருக்கு ஏதேனும் (தீங்கு) நேர்ந்தால், அவர் தன்னைத் தவிர வேறு எவரையும் குறை கூற வேண்டாம்."
அபூ ஈஸா கூறினார்கள்: இந்த ஹதீஸ் ஹஸன் ஃகரீப் ஆகும். அல்-அஃமாஷ் அவர்களின் அறிவிப்பாக இந்த ஹதீஸை இந்த வழியின் மூலமாக அன்றி நாங்கள் அறியவில்லை.