அபூ அய்யூப் அல்-அன்சாரி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு மனிதர் தம் சகோதரரை மூன்று இரவுகளுக்கு மேல் புறக்கணிப்பது (அல்லது அவருடன் பேசுவதைத் தவிர்ப்பது) ஆகுமானதல்ல. அவர்கள் இருவரும் சந்திப்பார்கள்; அப்போது இவர் (தம் முகத்தைத்) திருப்பிக் கொள்வார்; அவரும் (தம் முகத்தைத்) திருப்பிக் கொள்வார். இவ்விருவரில் யார் முதலில் ஸலாம் கூறுகிறாரோ அவரே சிறந்தவர் ஆவார்."
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثٍ، يَلْتَقِيَانِ فَيَصُدُّ هَذَا، وَيَصُدُّ هَذَا، وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلاَمِ . وَذَكَرَ سُفْيَانُ أَنَّهُ سَمِعَهُ مِنْهُ ثَلاَثَ مَرَّاتٍ.
அபூ அய்யூப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் தன் சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் (பேசாமல், உறவைத் துண்டித்து) வெறுத்து ஒதுங்கியிருப்பது ஆகுமானதல்ல. அவ்விருவரும் சந்திக்கும்போது, இவர் ஒரு புறமும் அவர் மறுபுறமும் (முகத்தைத்) திருப்பிக் கொள்கிறார்கள். அவ்விருவரில் சிறந்தவர், யார் முதலில் ஸலாமைத் தொடங்குகிறாரோ அவரே ஆவார்."
அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் தன் சகோதரரை மூன்று இரவுகளுக்கு மேல் வெறுத்து ஒதுக்குவது (உறவைத் துண்டிப்பது) ஆகுமானதல்ல. இருவரும் சந்திக்கும்போது இவர் (ஒரு பக்கம்) திரும்பிக்கொள்வார்; அவரும் (மறுபக்கம்) திரும்பிக்கொள்வார். இவ்விருவரில் யார் முதலில் ஸலாமைத் துவங்குகிறாரோ அவரே சிறந்தவர்."