அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?" அவர்கள் (சஹாபாக்கள் ரழி) கூறினார்கள்: "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவார்கள்." அப்போது அவர்கள் (நபி (ஸல்) அவர்கள்) கூறினார்கள்: "உமது சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத விதத்தில் நீர் பேசுவதே (புறம் பேசுதல் ஆகும்)." கேட்கப்பட்டது: "நான் குறிப்பிடும் (அந்தக்) குறை என் சகோதரனிடம் உண்மையாகவே இருந்தால், (அதைப் பற்றி) உங்கள் கருத்து என்ன?" அவர்கள் கூறினார்கள்: "நீர் குறிப்பிடும் அந்தக் குறை அவரிடம் உண்மையாகவே இருந்தால், நீர் அவரைப் புறம் பேசிவிட்டீர். அது அவரிடம் இல்லையென்றால், நீர் அவரை அவதூறு செய்துவிட்டீர்."