அபுத்தர்தா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் ஒரு முஃமினுடைய தராசில் வைக்கப்படும் நற்குணத்தை விட கனமானது வேறு எதுவும் இல்லை.
அபுல் வலீத் அவர்கள் கூறினார்கள்: அதா அல்-கைகரானி அவர்கள் கூறுவதை நான் கேட்டேன்: அபூதாவூத் அவர்கள் கூறினார்கள்: அவருடைய பெயர் அதா இப்னு யஃகூப் ஆகும். அவர் இப்ராஹீம் இப்னு நாஃபி அவர்களின் தாய்மாமன் ஆவார். அவர் கைகரானி அல்லது குகரானி என்று அழைக்கப்படுகிறார்.