அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
தர்மம் செல்வத்தைக் குறைப்பதில்லை. ஓர் அடியார் மற்றோர் அடியாருக்கு மன்னிப்பு வழங்கினால், அல்லாஹ் அதனால் அவருக்குக் கண்ணியத்தையே அதிகப்படுத்துகிறான். மேலும், ஓர் அடியார் அல்லாஹ்வுக்காகப் பணிந்தால், அல்லாஹ் அதனால் அவருடைய தகுதியையே உயர்த்துகிறான்.