உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள், பூமியால் விழுங்கப்படும் ஒரு படையைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது உம்மு ஸலமா (ரழி) அவர்கள், 'அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் (அந்தப் படையில் சேர) நிர்ப்பந்திக்கப்பட்டவர்களும் இருக்கலாமல்லவா?' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அவர்கள் தங்களின் நிய்யத்துகளுக்கு ஏற்ப (மறுமையில்) எழுப்பப்படுவார்கள்' என்று கூறினார்கள்.