حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَقْتَتِلَ فِئَتَانِ، فَيَكُونَ بَيْنَهُمَا مَقْتَلَةٌ عَظِيمَةٌ، دَعْوَاهُمَا وَاحِدَةٌ، وَلاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يُبْعَثَ دَجَّالُونَ كَذَّابُونَ قَرِيبًا مِنْ ثَلاَثِينَ، كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ رَسُولُ اللَّهِ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரே வாதத்தைக் கொண்ட இரு குழுக்கள் சண்டையிட்டு, அவர்களுக்கிடையே பெரும் உயிரிழப்பு ஏற்படும் வரை யுகமுடிவு நேரம் நிகழாது. மேலும், முப்பதுக்கும் நெருக்கமான பெரும் பொய்யர்களான தஜ்ஜால்கள் தோன்றி, அவர்கள் அனைவரும் தங்களை அல்லாஹ்வின் தூதர்கள் என்று வாதிடும் வரை யுகமுடிவு நேரம் நிகழாது."
மறுமை நாள் ஏற்படாது, முப்பதுக்கு நெருக்கமான பொய்யர்களான தஜ்ஜால்கள் (உலகில்) தோன்றும் வரை. அவர்களில் ஒவ்வொருவரும் தான் அல்லாஹ்வின் தூதர் என்று வாதிடுவார்கள்.