حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أُرَاهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ أَعْوَرُ عَيْنِ الْيُمْنَى، كَأَنَّهَا عِنَبَةٌ طَافِيَةٌ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் (தஜ்ஜால் பற்றி) கூறினார்கள்: "அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான்; அவனது வலது கண் உப்பிப் புடைத்திருக்கும் திராட்சைப்பழத்தைப் போன்று இருக்கும்."
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ ذُكِرَ الدَّجَّالُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّ اللَّهَ لاَ يَخْفَى عَلَيْكُمْ، إِنَّ اللَّهَ لَيْسَ بِأَعْوَرَ ـ وَأَشَارَ بِيَدِهِ إِلَى عَيْنِهِ ـ وَإِنَّ الْمَسِيحَ الدَّجَّالَ أَعْوَرُ الْعَيْنِ الْيُمْنَى كَأَنَّ عَيْنَهُ عِنَبَةٌ طَافِيَةٌ .
அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்களிடம் தஜ்ஜால் பற்றிக் குறிப்பிடப்பட்டது. அப்போது அவர்கள், “நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு மறைவானவன் அல்லன் (அவனுடைய பண்புகள் தெளிவானவை); நிச்சயமாக அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன்” என்று கூறிவிட்டு, தமது கையால் தமது கண்ணைச் சுட்டிக் காட்டினார்கள். (மேலும்), “நிச்சயமாக மஸீஹ் தஜ்ஜால் வலது கண் ஊனமுற்றவன் ஆவான்; அவனது கண் துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்று இருக்கும்” என்று கூறினார்கள்.