இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

601ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي حَثْمَةَ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم صَلاَةَ الْعِشَاءِ فِي آخِرِ حَيَاتِهِ، فَلَمَّا سَلَّمَ قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ أَرَأَيْتَكُمْ لَيْلَتَكُمْ هَذِهِ فَإِنَّ رَأْسَ مِائَةٍ لاَ يَبْقَى مِمَّنْ هُوَ الْيَوْمَ عَلَى ظَهْرِ الأَرْضِ أَحَدٌ ‏"‏‏.‏ فَوَهِلَ النَّاسُ فِي مَقَالَةِ رَسُولِ اللَّهِ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ إِلَى مَا يَتَحَدَّثُونَ مِنْ هَذِهِ الأَحَادِيثِ عَنْ مِائَةِ سَنَةٍ، وَإِنَّمَا قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ لاَ يَبْقَى مِمَّنْ هُوَ الْيَوْمَ عَلَى ظَهْرِ الأَرْضِ ‏"‏ يُرِيدُ بِذَلِكَ أَنَّهَا تَخْرِمُ ذَلِكَ الْقَرْنَ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் தங்கள் வாழ்வின் இறுதிப் பகுதியில் ‘இஷா’ தொழுதார்கள். ஸலாம் கொடுத்ததும் நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, "உங்களின் இந்த இரவைப் பற்றி நீங்கள் அறிவீர்களா? (அதாவது, இதன் முக்கியத்துவத்தை உணர்கிறீர்களா?) ஏனெனில், (இந்த இரவிலிருந்து கணக்கிடப்படும்) நூறு ஆண்டுகள் நிறைவடையும்போது, இன்று பூமியின் மேற்பரப்பில் இருப்பவர்களில் எவரும் (உயிருடன்) எஞ்சியிருக்க மாட்டார்கள்" என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இக்கூற்றைக் கேட்ட மக்கள், நூறு ஆண்டுகள் குறித்து (மக்கள் மத்தியில்) பேசப்படும் செய்திகள் எனத் தவறாக விளங்கிக்கொண்டனர். ஆனால் நபி (ஸல்) அவர்கள், "இன்று பூமியின் மேற்பரப்பில் இருப்பவர்களில் எவரும் எஞ்சியிருக்க மாட்டார்கள்" என்றே கூறினார்கள். "அந்தத் தலைமுறை (முழுவதும்) அழிந்துவிடும்" என்பதே இதன் மூலம் அவர்களின் கருத்தாக இருந்தது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح