حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنِي أَخِي عَبْدُ الْحَمِيدِ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ رَأَيْتُ كَأَنَّ امْرَأَةً سَوْدَاءَ ثَائِرَةَ الرَّأْسِ، خَرَجَتْ مِنَ الْمَدِينَةِ، حَتَّى قَامَتْ بِمَهْيَعَةَ ـ وَهْىَ الْجُحْفَةُ ـ فَأَوَّلْتُ أَنَّ وَبَاءَ الْمَدِينَةِ نُقِلَ إِلَيْهَا .
அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "நான் (ஒரு கனவில்) தலைவிரி கோலத்துடன் ஒரு கறுநிறப் பெண் மதீனாவிலிருந்து வெளியேறி மஹய்ஆ என்ற இடத்தில் – அதாவது அல்ஜுஹ்ஃபாவில் – தங்குவதைக் கண்டேன். மதீனாவின் கொள்ளைநோய் அந்த இடத்திற்கு (அல்ஜுஹ்ஃபாவிற்கு) மாற்றப்படுவதன் அடையாளமாக நான் அதை வியாக்கியானம் செய்தேன்."
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ فِي رُؤْيَا النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْمَدِينَةِ رَأَيْتُ امْرَأَةً سَوْدَاءَ ثَائِرَةَ الرَّأْسِ، خَرَجَتْ مِنَ الْمَدِينَةِ، حَتَّى نَزَلَتْ بِمَهْيَعَةَ، فَتَأَوَّلْتُهَا أَنَّ وَبَاءَ الْمَدِينَةِ نُقِلَ إِلَى مَهْيَعَةَ، وَهْىَ الْجُحْفَةُ .
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் கண்ட கனவைப் பொறுத்தவரையில், நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: "நான் (ஒரு கனவில்) கலைந்த கூந்தலுடன் ஒரு கறுப்பினப் பெண் மதீனாவிலிருந்து வெளியேறி மஹைஆவில் குடியேறுவதைக் கண்டேன். மதீனாவின் கொள்ளைநோய் மஹைஆவிற்கு, அதாவது அல்-ஜுஹ்ஃபாவிற்கு, மாற்றப்படுவதன் (அடையாளமாக) நான் அதை விளக்கினேன்."
ஸாலிம் அவர்களின் தந்தை (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "நான் (ஒரு கனவில்) தலைவிரி கோலமான ஒரு கருப்புப் பெண் மதீனாவிலிருந்து வெளியேறி மஹ்யஆ என்ற இடத்தில் தங்குவதைக் கண்டேன். அதனை, மதீனாவின் கொள்ளை நோய் மஹ்யஆவுக்கு, அதாவது அல்ஜுஹ்ஃபாவுக்கு மாற்றப்படுவதன் (அடையாளமாக) நான் வியாக்கியானம் செய்தேன்."