ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சாட்சிகளில் மிகச் சிறந்தவர் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்க வேண்டாமா? தம்மிடம் (சாட்சியம்) கேட்கப்படுவதற்கு முன்பே தமது சாட்சியத்தை முன்வைப்பவரே அவர்.