ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"வ அன்திர் அஷீரதக் கல் அக்ரபீன்" ("மேலும், உங்களின் நெருங்கிய உறவினர்களை எச்சரியுங்கள்") என்ற இறைவசனம் அருளப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸஃபாவின் மீது ஏறி நின்று கூறினார்கள்:
"முஹம்மதுவின் மகள் ஃபாத்திமாவே! அப்துல் முத்தலிபின் மகள் ஸஃபிய்யாவே! அப்துல் முத்தலிபின் புதல்வர்களே! நான் உங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து எதையும் (அவனது தண்டனையிலிருந்து காக்க) அதிகாரம் பெற்றவன் அல்லன். என் செல்வத்திலிருந்து நீங்கள் விரும்புவதை என்னிடம் கேட்கலாம்."