حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، قَالَ سَمِعْتُ سَعْدًا ـ رضى الله عنه ـ يَقُولُ إِنِّي لأَوَّلُ الْعَرَبِ رَمَى بِسَهْمٍ فِي سَبِيلِ اللَّهِ، وَكُنَّا نَغْزُو مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَا لَنَا طَعَامٌ إِلاَّ وَرَقُ الشَّجَرِ، حَتَّى إِنَّ أَحَدَنَا لَيَضَعُ كَمَا يَضَعُ الْبَعِيرُ أَوِ الشَّاةُ، مَا لَهُ خِلْطٌ، ثُمَّ أَصْبَحَتْ بَنُو أَسَدٍ تُعَزِّرُنِي عَلَى الإِسْلاَمِ، لَقَدْ خِبْتُ إِذًا وَضَلَّ عَمَلِي. وَكَانُوا وَشَوْا بِهِ إِلَى عُمَرَ، قَالُوا لاَ يُحْسِنُ يُصَلِّي.
ஸஃத் (ரழி) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் பாதையில் அம்பெய்த அரபுகளில் நானே முதலாமவன். நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் போரிடுவோம். அப்போது மரங்களின் இலைகளைத் தவிர எங்களுக்கு உண்ண எதுவும் இருக்காது. அதனால் எங்களில் ஒருவர் ஒட்டகம் அல்லது ஆடு இடுவதைப் போன்றே (காய்ந்த) பிழுக்கைகளையே கழிப்பார்; அதில் யாதொரு இளகலும் இருக்காது. பின்னர், பனூ அஸத் கூட்டத்தார் இஸ்லாத்துடைய விஷயத்தில் என்னைக் குறை கூறுகின்றனர். அவ்வாறாயின், நான் நஷ்டமடைந்து விட்டேன்; என் அமல்களும் வீணாகிவிட்டன."
(ஸஃத் (ரழி) அவர்கள் தொழுகையைச் சரியாக நிறைவேற்றுவதில்லை என்று அந்த மக்கள் உமர் (ரழி) அவர்களிடம் புகார் கூறியிருந்தனர்).
ஸஃத் (ரழி) அவர்கள் கூறியதாவது:
"அரபிகளில் அல்லாஹ்வின் பாதையில் முதன்முதலில் அம்பு எய்தவன் நான்தான். நாங்கள் (நபி (ஸல்) அவர்களுடன்) போரிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது 'ஹுப்லா' மற்றும் 'ஸமுர்' மரங்களின் இலைகளைத் தவிர எங்களுக்கு உண்ண எதுவும் இருக்கவில்லை. எனவே, எங்களில் ஒருவர் ஆடு (புழுக்கை) போடுவது போன்று மலம் கழிப்பார்; அதில் (இலகிய தன்மை) எதுவும் கலந்திருக்காது. (நிலைமை இவ்வாறிருக்க,) இன்று பனூ அஸத் குலத்தார் இஸ்லாத்தைப் பற்றி என்னைக் கண்டிக்கின்றனர் (அல்லது திருத்த முற்படுகின்றனர்). அப்படியாயின் நான் நஷ்டமடைந்துவிட்டேன்; என் முயற்சியும் வீணாகிவிட்டது."
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அரபுகளில் அல்லாஹ்வின் பாதையில் முதன்முதலில் அம்பு எய்தவன் நானே. நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (போருக்குப்) புறப்படுவோம்; அப்போது எங்களுக்கு ஹுப்லா மற்றும் ஸமுர் மரங்களின் இலைகளைத் தவிர உண்பதற்கு வேறு உணவு இருக்காது. அதன் விளைவாக, எங்களில் ஒருவர் ஆடு (புழுக்கை) போடுவதைப் போன்றுதான் மலம் கழிப்பார்.
இப்போது பனூ அஸத் கூட்டத்தார் மார்க்க விஷயத்தில் எனக்குக் குறை கூறவும் (அல்லது கண்டிக்கவும்) முற்படுகின்றனர். அப்படியானால், நிச்சயமாக நான் நஷ்டமடைந்துவிட்டேன்; என் செயல்கள் அனைத்தும் வீணாகிவிட்டன.
(அறிவிப்பாளர்) இப்னு நுமைர் அவர்கள் (தமது அறிவிப்பில்), 'இத்ஹன்' (அப்படியாயின்) என்ற வார்த்தையைக் குறிப்பிடவில்லை.