நுஃமான் இப்னு பஷீர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"நீங்கள் உங்கள் மனவிருப்பப்படி உண்டு பருகுவதில்லையா? ஆனால், உங்கள் நபி (ஸல்) அவர்கள் தமது வயிற்றை நிரப்பிக்கொள்வதற்குத் தரம் குறைந்த பேரீச்சம்பழங்களைக்கூடப் பெற முடியாத நிலையில் இருந்ததை நான் பார்த்திருக்கிறேன்."
குதைபா அவர்கள் (தம் அறிவிப்பில்) 'அதன் மூலம்' (பிஹி) என்பதைக் குறிப்பிடவில்லை.