அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: முஹாஜிர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதரே! அன்சாரிகள் முழுமையான நற்கூலியையும் பெற்றுக்கொண்டார்கள்." அதற்கு அவர்கள் (ஸல்) கூறினார்கள்: "இல்லை, நீங்கள் அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து, அவர்களைப் புகழ்ந்துரைக்கும் வரை (உங்களுக்கும் நற்கூலி உண்டு)."
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: முஹாஜிர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அன்சார்கள் எல்லா நன்மைகளையும் (தங்கள் தியாகங்கள் மற்றும் உதவிகள் மூலம்) எடுத்துக் கொண்டார்கள் (என்று நாங்கள் அஞ்சுகிறோம்)!” என்று கூறினார்கள். அதற்கு அவர் (ஸல்), “இல்லை. நீங்கள் அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்து, அதற்காக அவர்களைப் புகழும் காலமெல்லாம் (உங்களுக்கும் நன்மைகள் உண்டு; உங்கள் நன்மைகள் குறைந்துவிடாது)” என்று கூறினார்கள்.