அபூ மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவரின் அதிகாரத்திற்குட்பட்ட இடத்தில் (அவரது அனுமதியின்றி) வேறு யாரும் இமாமாக நின்று தொழுகை நடத்தக் கூடாது. மேலும், அவருடைய அனுமதியின்றி அவருடைய சிறப்பு இருக்கையில் (அல்லது கண்ணியத்திற்குரிய இடத்தில்) வேறு யாரும் அமரக் கூடாது.'