புரைதா இப்னுல் ஹஸீப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அலி (ரழி) அவர்களிடம் கூறினார்கள்: "அலியே! (அந்நியப் பெண்ணின் மீது) ஒரு பார்வைக்குப் பின் மற்றொரு பார்வையைத் தொடரச் செய்யாதீர். ஏனெனில், நிச்சயமாக முதல் பார்வை உமக்கு (தற்செயலாக விழுந்தால்) அனுமதிக்கப்பட்டது; ஆனால், பிந்திய பார்வை உமக்குரியதல்ல (அது பாவமானது)."