وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، وَيَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، جَمِيعًا عَنْ يَحْيَى، - قَالَ ابْنُ حَاتِمٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، - حَدَّثَنَا يَزِيدُ بْنُ كَيْسَانَ، حَدَّثَنَا أَبُو حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " احْشِدُوا فَإِنِّي سَأَقْرَأُ عَلَيْكُمْ ثُلُثَ الْقُرْآنِ " . فَحَشَدَ مَنْ حَشَدَ ثُمَّ خَرَجَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم فَقَرَأَ { قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} ثُمَّ دَخَلَ فَقَالَ بَعْضُنَا لِبَعْضٍ إِنِّي أُرَى هَذَا خَبَرٌ جَاءَهُ مِنَ السَّمَاءِ فَذَاكَ الَّذِي أَدْخَلَهُ . ثُمَّ خَرَجَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " إِنِّي قُلْتُ لَكُمْ سَأَقْرَأُ عَلَيْكُمْ ثُلُثَ الْقُرْآنِ أَلاَ إِنَّهَا تَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ " .
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒன்று கூடுங்கள்! நான் உங்களுக்குக் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓதிக் காட்டப்போகிறேன்" என்று கூறினார்கள். அவ்வாறே (மக்கள்) ஒன்று கூடினர். பின்னர் அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்து, '{குல் ஹுவல்லாஹு அஹத்}' (அல்லாஹ் ஒருவன் என்று கூறுவீராக!) என்று ஓதினார்கள். பிறகு (வீட்டிற்குள்) சென்றுவிட்டார்கள்.
ஆகவே எங்களில் சிலர் மற்றவர்களிடம், "வானத்திலிருந்து அவர்களுக்கு ஏதேனும் செய்தி (வஹி) வந்திருக்க வேண்டும்; அதுதான் அவர்களை உள்ளே செல்ல வைத்துவிட்டது என்று நான் கருதுகிறேன்" என்று பேசிக்கொண்டோம்.
பிறகு அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் (மீண்டும்) வெளியே வந்து, "நான் உங்களுக்குக் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓதிக் காட்டுவதாகக் கூறினேன் (அல்லவா?) அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக இது குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமமானதாகும்" என்று கூறினார்கள்.