அகர்ர் அபி முஸ்லிம் அவர்கள் அறிவித்தார்கள்:
அபூ ஹுரைரா (ரழி) அவர்களும் அபூ ஸயீத் குத்ரீ (ரழி) அவர்களும், அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் ‘யாதொரு கூட்டத்தினர் (அல்லாஹ்வை) நினைவு கூர்ந்து (ஓரிடத்தில்) அமர்ந்தாலும், அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கிறார்கள்; அவர்களை இறைக்கருணை மூடிக் கொள்கிறது; அவர்கள் மீது அமைதி இறங்குகிறது; அல்லாஹ் தன்னிடம் உள்ளவர்களிடம் அவர்களைப் பற்றி குறிப்பிடுகிறான்’ என்று கூறியபோது அங்கே இருந்தார்கள் என்பதற்கு நான் சாட்சி கூறுகிறேன்.
இந்த ஹதீஸ் ஷுஃபா அவர்களிடமிருந்தும் இதே அறிவிப்பாளர் தொடருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.