இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2700 a, bஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ
أَبَا إِسْحَاقَ، يُحَدِّثُ عَنِ الأَغَرِّ أَبِي مُسْلِمٍ، أَنَّهُ قَالَ أَشْهَدُ عَلَى أَبِي هُرَيْرَةَ وَأَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ
أَنَّهُمَا شَهِدَا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ ‏ ‏ لاَ يَقْعُدُ قَوْمٌ يَذْكُرُونَ اللَّهَ عَزَّ وَجَلَّ
إِلاَّ حَفَّتْهُمُ الْمَلاَئِكَةُ وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَنَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ وَذَكَرَهُمُ اللَّهُ فِيمَنْ عِنْدَهُ ‏ ‏
‏.‏

وَحَدَّثَنِيهِ زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا شُعْبَةُ، فِي هَذَا الإِسْنَادِ نَحْوَهُ
‏.‏
அகர்ர் அபூ முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
“அபூ ஹுரைரா (ரலி) மற்றும் அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) ஆகிய இருவரும், நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதாகச் சாட்சியம் அளித்ததற்கு நான் சாட்சி கூறுகிறேன்:

‘எந்தவொரு கூட்டத்தாரும் (ஓரிடத்தில்) அமர்ந்து, மகத்துவமும் கண்ணியமும் மிக்க அல்லாஹ்வை நினைவு கூர்வார்களாயின், அவர்களை வானவர்கள் சூழ்ந்து கொள்ளாமலும், அவர்களை இறைக்கருணை போர்த்திக் கொள்ளாமலும், அவர்கள் மீது அமைதி இறங்காமலும், அல்லாஹ் தன்னிடத்தில் இருப்பவர்களிடத்தில் அவர்களைக் குறித்து நினைவு கூராமலும் இருப்பதில்லை.’”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح