அகர்ர் அபூ முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
“அபூ ஹுரைரா (ரலி) மற்றும் அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) ஆகிய இருவரும், நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதாகச் சாட்சியம் அளித்ததற்கு நான் சாட்சி கூறுகிறேன்:
‘எந்தவொரு கூட்டத்தாரும் (ஓரிடத்தில்) அமர்ந்து, மகத்துவமும் கண்ணியமும் மிக்க அல்லாஹ்வை நினைவு கூர்வார்களாயின், அவர்களை வானவர்கள் சூழ்ந்து கொள்ளாமலும், அவர்களை இறைக்கருணை போர்த்திக் கொள்ளாமலும், அவர்கள் மீது அமைதி இறங்காமலும், அல்லாஹ் தன்னிடத்தில் இருப்பவர்களிடத்தில் அவர்களைக் குறித்து நினைவு கூராமலும் இருப்பதில்லை.’”