وعن عائشة رضي الله عنها قالت: كان النبي صلى الله عليه وسلم إذا عصفت الريح قال: اللهم إني أسألك خيرها، وخير ما فيها، وخير ما أُرسلت به، وأعوذ بك من شرها، وشر ما فيها، وشر ما أُرسلت به" ((رواه مسلم)).
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: காற்று பலமாக வீசும்போதெல்லாம், நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்: "அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க கைரஹா, வ கைர மா ஃபீஹா, வ கைர மா உர்ஸிலத் பிஹி. வ அஊது பிக்க மின் ஷர்ரிஹா, வ ஷர்ரி மா ஃபீஹா, வ ஷர்ரி மா உர்ஸிலத் பிஹி. (அல்லாஹ்வே, நான் உன்னிடம் இதன் நன்மையையும், இதில் உள்ளவற்றின் நன்மையையும் (அதாவது, காற்றுடன் வரும் மழை, குளிர்ந்த காற்று போன்ற நன்மைகளையும்), இது எதன் பொருட்டு அனுப்பப்பட்டதோ அதன் நன்மையையும் (அதாவது, அல்லாஹ்வின் அருளாக அனுப்பப்பட்டிருந்தால் அதன் நன்மையையும்) கேட்கிறேன். மேலும் நான் உன்னிடம் இதன் தீங்கிலிருந்தும், இதில் உள்ளவற்றின் தீங்கிலிருந்தும் (அதாவது, காற்றுடன் வரும் புழுதி, தூசி, நோய்கள் போன்ற தீங்கிலிருந்தும்), இது எதன் பொருட்டு அனுப்பப்பட்டதோ அதன் தீங்கிலிருந்தும் (அதாவது, அல்லாஹ்வின் தண்டனையாக அனுப்பப்பட்டிருந்தால் அதன் தீங்கிலிருந்தும்) பாதுகாப்புத் தேடுகிறேன்)."