حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، قَالَ حَدَّثَنِي سَالِمٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ زَيْدَ بْنَ حَارِثَةَ، مَوْلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَا كُنَّا نَدْعُوهُ إِلاَّ زَيْدَ ابْنَ مُحَمَّدٍ حَتَّى نَزَلَ الْقُرْآنُ {ادْعُوهُمْ لآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِنْدَ اللَّهِ}.
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடிமையாய் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஸைத் பின் ஹாரிஸா (ரழி) அவர்களை, "அவர்களை (வளர்ப்பு மகன்கள்) அவர்களின் தந்தையரின் பெயர்களால் அழையுங்கள். அதுவே அல்லாஹ்வின் சமூகத்தில் மிகவும் நீதியானது." (33:5) என்ற குர்ஆன் வசனம் அருளப்படும் வரை, நாங்கள் ஸைத் பின் முஹம்மது என்றே அழைத்து வந்தோம்.
ஸாலிம் இப்னு அப்துல்லாஹ் அவர்கள் தம் தந்தையார் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் வாயிலாக அறிவித்தார்கள்:
ஸைத் இப்னு ஹாரிஸா (ரழி) அவர்களை 'ஸைத் இப்னு முஹம்மத் (ஸல்)' என்றே நாங்கள் அழைத்து வந்தோம்; குர்ஆனில் (பின்வரும் வசனம்) வஹீ (இறைச்செய்தி) அருளப்படும் வரை:
"அவர்களை அவர்களின் தந்தையர் பெயராலேயே அழையுங்கள். இதுவே அல்லாஹ்விடம் மிகவும் நீதியானது"
(இந்த ஹதீஸ் குதைபா இப்னு ஸஃத் அவர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது)