அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நரகம், 'இன்னும் அதிகம் இருக்கிறதா?' என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும். கண்ணியத்திற்குரிய இறைவன் தனது பாதத்தை அதில் வைக்கும் வரை (இந்நிலை நீடிக்கும்). பின்னர் அது, 'கத்! கத்! (போதும்! போதும்!) உன் கண்ணியத்தின் மீது ஆணையாக!' என்று கூறும். மேலும் அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் (சேர்ந்து) சுருங்கிவிடும்."
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரகம் தொடர்ந்து, 'இன்னும் அதிகம் இருக்கிறதா?' என்று கேட்டுக்கொண்டே இருக்கும். கண்ணியத்தின் அதிபதியும், பாக்கியமிக்கவனும், உயர்ந்தவனுமாகிய இறைவன் தனது பாதத்தை அதில் வைக்கும் வரை. அப்போது அது, 'உனது கண்ணியத்தின் மீது ஆணையாக! போதும், போதும்,' என்று கூறும். மேலும் அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் சுருங்கிவிடும் (மற்றும் நிரம்பிவிடும்).