"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஓ ருவைஃபிஉ! எனக்குப் பிறகு நீங்கள் நீண்ட காலம் வாழக்கூடும். எனவே, மக்களிடம் (பின்வருமாறு) கூறுங்கள்: யார் தனது தாடியை முடிச்சுப் போடுகிறாரோ, அல்லது (கழுத்தில்) நாண் அணிந்துகொள்கிறாரோ, அல்லது விலங்குகளின் சாணம் அல்லது எலும்பைக் கொண்டு (மலஜலம் கழித்தபின்) தன்னைச் சுத்தம் செய்கிறாரோ, நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவரை விட்டும் விலகியவர் (என்று).'