அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஹதஸ் செய்தவரின் தொழுகை, அவர் அங்கசுத்தி (உளூ) செய்யும் வரை ஏற்றுக்கொள்ளப்படாது."
ஹத்ரமவ்த்தைச் சேர்ந்த ஒருவர் அபூ ஹுரைரா (ரழி) அவர்களிடம், "'ஹதஸ்' என்றால் என்ன?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "சப்தமின்றியோ அல்லது சப்தத்துடனோ காற்றுப் பிரிவதாகும்" என்று பதிலளித்தார்கள்.
حَدَّثَنِي إِسْحَاقُ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لاَ يَقْبَلُ اللَّهُ صَلاَةَ أَحَدِكُمْ إِذَا أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உங்களில் ஒருவருக்கு ஹதஸ் (அதாவது, கீழ்வாயு வெளியேறுதல்) ஏற்பட்டு அவர் (மீண்டும்) உளூச் செய்யும் வரை, அல்லாஹ் அவரின் தொழுகையை ஏற்றுக்கொள்வதில்லை."
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ بْنُ هَمَّامٍ، حَدَّثَنَا مَعْمَرُ بْنُ رَاشِدٍ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، أَخِي وَهْبِ بْنِ مُنَبِّهٍ قَالَ هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنْ مُحَمَّدٍ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَ تُقْبَلُ صَلاَةُ أَحَدِكُمْ إِذَا أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ .
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“உங்களில் ஒருவருக்கு உளூ நீங்கிவிட்டால், அவர் உளூச் செய்யும் வரை அவரது தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது.”