முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒரு குழுவினரிடையே இது குறித்து கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அன்ஸாரிகள், "(விந்து) பீறிட்டு வெளிப்பட்டால் அல்லது நீர் வெளியானால் மட்டுமே குளிப்பு கடமையாகும்" என்று கூறினர். ஆனால் முஹாஜிர்கள், "(உடலுறவின் மூலம்) கலந்துவிட்டாலே குளிப்பு கடமையாகிவிடும்" என்று கூறினர்.
அபூமூஸா (ரலி) அவர்கள், "இதற்கு நான் உங்களுக்குத் தீர்வு தருகிறேன்" என்று கூறிவிட்டு, (எழுந்து) ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அனுமதி கோரினார்கள். அனுமதி அளிக்கப்பட்டதும் அவர்களிடம், "தாயே! - அல்லது இறைநம்பிக்கையாளர்களின் தாயே! - தங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்க விரும்புகிறேன். ஆனால் தங்களிடம் (கேட்க) வெட்கப்படுகிறேன்" என்று கூறினார்கள்.
அதற்கு ஆயிஷா (ரலி), "உங்களைப் பெற்றெடுத்த தாயிடம் எதைக் கேட்பதற்கு நீங்கள் வெட்கப்படமாட்டீர்களோ, அதைக் கேட்பதற்கு என்னிடம் வெட்கப்பட வேண்டாம். ஏனெனில், நானும் உங்களுக்குத் தாய்தான்" என்று கூறினார்கள்.
நான், "குளிப்பை அவசியமாக்குவது எது?" என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், "இதைப்பற்றித் தெரிந்தவரிடமே வந்துள்ளீர்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஒருவன் (பெண்ணின்) நான்கு கிளைகளுக்கிடையே அமர்ந்து, (இரு) விருத்தசேதன உறுப்புகளும் ஒன்றை ஒன்று தொட்டுவிட்டால் குளிப்பு கடமையாகிவிடுகிறது'" என்று பதிலளித்தார்கள்.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒருவர் தனது மனைவியின் நான்கு பாகங்களுக்கு இடையில் அமர்ந்து தாம்பத்திய உறவில் ஈடுபட்டால், குளிப்பு (குஸ்ல்) கடமையாகி விடுகிறது."
அபூ அப்துர்-ரஹ்மான் அவர்கள் கூறினார்கள்: "இது ஒரு தவறாகும், சரியானது என்னவென்றால்; ‘அஷ்அத் அவர்கள் அல்-ஹஸன் அவர்களிடமிருந்தும், அவர் அபூ ஹுரைரா (ரழி) அவர்களிடமிருந்தும்’ (அறிவித்ததே). அன்-நள்ர் பின் ஷுமைல் மற்றும் மற்றவர்கள், காலித் அறிவித்ததைப் போலவே இந்த ஹதீஸை ஷுஃபாவிடமிருந்து அறிவித்தார்கள்."