ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
“எங்களில் ஒருவருக்கு ஜுனூபு (பெருந்தொடக்கு) ஏற்பட்டால், அவர் தமது இரு கைகளாலும் (தண்ணீர்) எடுத்துத் தமது தலையின் மீது மூன்று முறை (ஊற்றிக்) கொள்வார். பிறகு தமது கையால் தமது வலது புறத்தின் மீதும், மற்றொரு கையால் தமது இடது புறத்தின் மீதும் (தண்ணீரை ஊற்றிக்) கொள்வார்.”