இப்னு உம்மி மக்தூம் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதரே! மதீனாவில் (விஷமுள்ள) ஊர்வனங்களும் (மற்றும்) காட்டு விலங்குகளும் அதிகமாக உள்ளன." அதற்கு நபி (ஸல்) அவர்கள், "'தொழுகையின் பக்கம் வாருங்கள், வெற்றியின் பக்கம் வாருங்கள்' என்பது உமக்குக் கேட்கிறதா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "ஆம்" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அப்படியாயின், (தொழுகைக்கு) வாரும்" என்று கூறினார்கள். அவருக்கு (ஜமாஅத் தொழுகைக்கு வராமல் வீட்டில் தொழ) நபி (ஸல்) அவர்கள் சலுகையளிக்கவில்லை.