ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
கீழாடைகள் (மிகவும்) சிறிதாக இருந்த காரணத்தால், ஆண்கள் சிறுவர்களைப் போன்று தங்கள் கீழாடைகளைத் தங்கள் கழுத்துகளில் கட்டிக்கொண்டு நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (தொழுகையில்) இருந்ததை நான் பார்த்தேன். அப்போது ஒருவர், 'பெண்களே! ஆண்கள் (தங்கள்) தலைகளை உயர்த்தும் வரை நீங்கள் உங்கள் தலைகளை உயர்த்தாதீர்கள்' என்று கூறினார்.