அஸ்-ஸாயிப் பின் யஸீத் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"மதீனாவில் மக்கள் அதிகமானபோது, உஸ்மான் (ரழி) அவர்கள்தாம் மூன்றாவது அதானுக்குக் கட்டளையிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரே ஒரு முஅத்தின் மட்டுமே இருந்தார். மேலும் ஜுமுஆ நாளன்று இமாம் அமரும்போதே அதான் சொல்லப்பட்டு வந்தது."