حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ أَبُو النَّضْرِ عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي رَكْعَتَيْنِ فَإِنْ كُنْتُ مُسْتَيْقِظَةً حَدَّثَنِي وَإِلاَّ اضْطَجَعَ. قُلْتُ لِسُفْيَانَ فَإِنَّ بَعْضَهُمْ يَرْوِيهِ رَكْعَتَىِ الْفَجْرِ. قَالَ سُفْيَانُ هُوَ ذَاكَ.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத் (ஃபஜ்ருடைய சுன்னத் தொழுகை) தொழுவார்கள். நான் விழித்திருந்தால் என்னிடம் பேசுவார்கள்; இல்லையெனில் படுத்துக்கொள்வார்கள். (அறிவிப்பாளர் அலி பின் அப்தில்லாஹ் கூறுகிறார்:) நான் சுஃப்யான் (ரஹ்) அவர்களிடம், "சிலர் இதனை 'ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத்' என்று அறிவிக்கின்றனரே?" என்று கேட்டேன். அதற்கு சுஃப்யான் (ரஹ்), "அது அதுவேதான்" என்று பதிலளித்தார்கள்.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையின் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுத பின், நான் விழித்திருந்தால் என்னிடம் பேசுவார்கள்; இல்லையென்றால் அவர்கள் (தம் வலது பக்கமாக) படுத்துக் கொள்வார்கள்.