மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நான் ஆயிஷா (ரழி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செயலைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “நிலையான செயலை அவர்கள் விரும்பினார்கள்” என்று கூறினார்கள். நான், “அவர் எந்த நேரத்தில் தொழுவார்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “கூவுபவரின் (சேவலின்) சப்தத்தை அவர் கேட்டால் எழுந்து தொழுவார்கள்” என்று கூறினார்கள்.