ரபீஆ பின் கஅப் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இரவில் தங்குபவனாக இருந்தேன். அவர்களுக்கு வுளூ (அங்கசுத்தி) செய்வதற்கான தண்ணீரையும், அவர்களுக்குத் தேவையானவற்றையும் நான் கொண்டு வருவேன். (அப்போது) அவர்கள் என்னிடம், "கேளும்" என்றார்கள். நான், "சொர்க்கத்தில் தங்களுடைய தோழமையை வேண்டுகிறேன்" என்றேன். அவர்கள், "வேறு ஏதேனும் (வேண்டுமா)?" என்று கேட்டார்கள். நான், "(எனக்குத் தேவையானது) அதுவேதான்" என்றேன். அவர்கள், "அப்படியாயின், அதிகமாக ஸஜ்தா (சிரவணக்கம்) செய்வதன் மூலம் (உமக்காக) எனக்கு உதவுவீராக" என்று கூறினார்கள்.
ரபீஆ பின் கஅப் அல்-அஸ்லமீ (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு உளூச் செய்வதற்கான தண்ணீரையும், அவர்களுக்குத் தேவையானவற்றையும் கொண்டு வருபவனாக இருந்தேன். அவர்கள் (என்னிடம்), 'கேளுங்கள்' என்று கூறினார்கள். நான், 'சுவனத்தில் தங்களுடன் இருக்கும் தோழமையை உங்களிடம் கேட்கிறேன்' என்று கூறினேன். அவர்கள், 'வேறு ஏதேனும் உண்டா?' என்று கேட்டார்கள். நான், 'அதுவே எனக்குப் போதும்' என்று கூறினேன். அவர்கள், 'அப்படியாயின், அதிகமாக ஸஜ்தா செய்வதன் மூலம் (சுவனத்தில் என்னுடன் இருப்பதற்கான உனது விருப்பத்தை நிறைவேற்ற) எனக்கு நீ உதவி செய்' என்று கூறினார்கள்."