حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَلْقَمَةُ بْنُ مَرْثَدٍ، سَمِعْتُ سَعْدَ بْنَ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عُثْمَانَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ . قَالَ وَأَقْرَأَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ فِي إِمْرَةِ عُثْمَانَ حَتَّى كَانَ الْحَجَّاجُ، قَالَ وَذَاكَ الَّذِي أَقْعَدَنِي مَقْعَدِي هَذَا.
உஸ்மான் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் (முஸ்லிம்களில்) சிறந்தவர்கள் குர்ஆனைக் கற்று, அதைப் (பிறருக்குக்) கற்பிப்பவர்களே ஆவார்கள்.”
(இதன் அறிவிப்பாளர்) அபூஅப்துர் ரஹ்மான் அவர்கள், உஸ்மான் (ரழி) அவர்களின் ஆட்சிக்காலம் முதல் ஹஜ்ஜாஜ் அவர்களின் காலம் வரை (மக்களுக்குக் குர்ஆனைக்) கற்பித்து வந்தார்கள். மேலும் அவர்கள், “இதுவே (இந்த ஹதீஸே) என்னை இந்த இடத்தில் (கற்பிப்பதற்காக) அமர வைத்தது” என்றும் கூறினார்கள்.
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِنَّ أَفْضَلَكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ .
`உஸ்மான் பின் அஃப்பான் (ரழி)` அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உங்களில் (முஸ்லிம்களில்) மிகச் சிறந்தவர்கள் குர்ஆனைக் கற்று அதனைக் கற்பிப்பவர்களே ஆவார்கள்."
உஸ்மான் பின் அஃப்பான் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் சிறந்தவர் குர்ஆனைக் கற்றுக்கொள்பவரும், அதைப் (பிறருக்குக்) கற்பிப்பவரும் ஆவார்.”
அபூ அப்துர்-ரஹ்மான் அவர்கள் கூறினார்கள்: “இதுவே என்னை இந்த இடத்தில் அமரச் செய்தது.” மேலும் அவர், உஸ்மான் (ரழி) அவர்களின் காலத்திலிருந்து அல்-ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் வரும் வரை குர்ஆனைக் கற்பித்து வந்தார்.