أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلاَلِ بْنِ يِسَافٍ، قَالَ قَالَتْ عَائِشَةُ رضى الله عنها فَقَدْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ مَضْجَعِهِ فَجَعَلْتُ أَلْتَمِسُهُ وَظَنَنْتُ أَنَّهُ أَتَى بَعْضَ جَوَارِيهِ فَوَقَعَتْ يَدِي عَلَيْهِ وَهُوَ سَاجِدٌ وَهُوَ يَقُولُ اللَّهُمَّ اغْفِرْ لِي مَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ .
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படுக்கையில் இல்லாததைக் கண்டேன். (இருட்டில்) நான் அவர்களைத் தடவ ஆரம்பித்தேன். அவர்கள் தங்களின் அடிமைப் பெண்களில் ஒருவரிடம் சென்றிருக்கலாம் என்று நான் எண்ணினேன். அப்போது, அவர்கள் ஸஜ்தா செய்து கொண்டிருந்த நிலையில் என் கை அவர்கள் மீது பட்டது. அவர்கள், 'அல்லாஹும்மக்ஃபிர்லீ மா அஸ்ரர்து வ மா அஃலன்து (அல்லாஹ்வே, நான் மறைவாகச் செய்த மற்றும் வெளிப்படையாகச் செய்த (பாவத்)தை மன்னிப்பாயாக)' என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்."