இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3577ஜாமிஉத் திர்மிதீ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ الشَّنِّيُّ، حَدَّثَنِي أَبِي عُمَرُ بْنُ مُرَّةَ، قَالَ سَمِعْتُ بِلاَلَ بْنَ يَسَارِ بْنِ زَيْدٍ، مَوْلَى النَّبِيِّ صلى الله عليه وسلم حَدَّثَنِي أَبِي عَنْ جَدِّي سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ ‏ مَنْ قَالَ أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىَّ الْقَيُّومَ وَأَتُوبُ إِلَيْهِ ‏.‏ غُفِرَ لَهُ وَإِنْ كَانَ فَرَّ مِنَ الزَّحْفِ ‏ ‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ ‏.‏
நபி (ஸல்) அவர்களின் விடுவிக்கப்பட்ட அடிமையான ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

“நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யார், “மகத்தான அல்லாஹ்விடம் நான் பாவமன்னிப்புக் கோருகிறேன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை; அவன் (என்றென்றும்) உயிருடன் இருப்பவன்; (அனைத்தையும்) நிர்வகிப்பவன்; அவனிடமே நான் (பாவமன்னிப்புக் கோரி) மீள்கிறேன்,” (அஸ்தஃக்ஃபிருல்லாஹல்-அழீம் அல்லதீ லா இலாஹ இல்லா ஹுவல்-ஹய்யல்-கய்யூம வ அதூபு இலைஹி) என்று கூறுகிறாரோ, அவர் போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடியவராக இருந்தாலும் அவர் மன்னிக்கப்படுகிறார்.’”
ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)