உம்மு தர்தா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
என் கணவர் (அபூ தர்தா (ரழி) அவர்கள்), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாக அறிவித்தார்கள்:
"யார் தன் சகோதரருக்காக அவர் இல்லாதபோது (மறைவில்) பிரார்த்திக்கிறாரோ, அவருடன் நியமிக்கப்பட்டுள்ள வானவர், 'ஆமீன்! உமக்கும் அது போன்றே (நன்மை) கிடைக்கட்டும்' என்று கூறுகிறார்."