இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1497ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَتَاهُ قَوْمٌ بِصَدَقَتِهِمْ قَالَ ‏"‏ اللَّهُمَّ صَلِّ عَلَى آلِ فُلاَنٍ ‏"‏‏.‏ فَأَتَاهُ أَبِي بِصَدَقَتِهِ، فَقَالَ ‏"‏ اللَّهُمَّ صَلِّ عَلَى آلِ أَبِي أَوْفَى ‏"‏‏.‏
அப்துல்லாஹ் பின் அபூ அவ்ஃபா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

ஒரு கூட்டத்தார் தமது ஸகாத்துடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தால், நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹும்ம ஸல்லி அலா ஆலி ஃபுலான்" (யா அல்லாஹ்! இன்னாரது குடும்பத்தார் மீது உனது அருளைப் பொழிவாயாக) என்று கூறுவார்கள்.

என் தந்தை தமது ஸகாத்துடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தபோது, நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹும்ம ஸல்லி அலா ஆலி அபீ அவ்ஃபா" (யா அல்லாஹ்! அபூ அவ்ஃபாவின் குடும்பத்தார் மீது உனது அருளைப் பொழிவாயாக) என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
4166ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى ـ وَكَانَ مِنْ أَصْحَابِ الشَّجَرَةِ ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَتَاهُ قَوْمٌ بِصَدَقَةٍ قَالَ ‏"‏ اللَّهُمَّ صَلِّ عَلَيْهِمْ ‏"‏‏.‏ فَأَتَاهُ أَبِي بِصَدَقَتِهِ فَقَالَ ‏"‏ اللَّهُمَّ صَلِّ عَلَى آلِ أَبِي أَوْفَى ‏"‏‏.‏
அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
(அவர்கள், மரத்தின் கீழ் நபி (ஸல்) அவர்களிடம் பைஅத் செய்தவர்களில் ஒருவராவார்கள்.)

மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஸதகாவை கொண்டு வந்தபோது, அவர்கள் ''அல்லாஹும்ம ஸல்லி அலைஹிம்'' (யா அல்லாஹ்! அவர்களுக்கு அருள் புரிவாயாக!) என்று கூறுவார்கள்.

(ஒருமுறை) என் தந்தை தமது ஸதகாவுடன் அவரிடம் வந்தபோது, அவர்கள் ''அல்லாஹும்ம ஸல்லி அலா ஆலி அபீ அவ்ஃபா'' (யா அல்லாஹ்! அபீ அவ்ஃபாவின் குடும்பத்தாருக்கு அருள் புரிவாயாக!) என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2459சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ يَزِيدَ، قَالَ حَدَّثَنَا بَهْزُ بْنُ أَسَدٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ عَمْرُو بْنُ مُرَّةَ أَخْبَرَنِي قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَتَاهُ قَوْمٌ بِصَدَقَتِهِمْ قَالَ ‏"‏ اللَّهُمَّ صَلِّ عَلَى آلِ فُلاَنٍ ‏"‏ ‏.‏ فَأَتَاهُ أَبِي بِصَدَقَتِهِ فَقَالَ ‏"‏ اللَّهُمَّ صَلِّ عَلَى آلِ أَبِي أَوْفَى ‏"‏ ‏.‏
அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரழி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் தங்களின் ஸதக்காவை (தர்மத்தை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரும்போது, அவர்கள் "அல்லாஹும்ம ஸல்லி அலா ஆலி ஃபுலான்" (யா அல்லாஹ்! இன்னாரின் குடும்பத்தார் மீது அருள்புரிவாயாக!) என்று கூறுவார்கள். என் தந்தை தனது ஸதக்காவை அவர்களிடம் கொண்டுவந்தபோது, "அல்லாஹும்ம ஸல்லி அலா ஆலி அபீ அவ்ஃபா" (யா அல்லாஹ்! அபூஅவ்ஃபாவின் குடும்பத்தார் மீது அருள்புரிவாயாக!) என்று அவர்கள் கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)