இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1592சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ سَمِعْتُ أَبِي يَقُولُ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، فِي قَوْلِهِ ‏ ‏ لاَ جَلَبَ وَلاَ جَنَبَ ‏ ‏ ‏.‏ قَالَ أَنْ تُصَدَّقَ الْمَاشِيَةُ فِي مَوَاضِعِهَا وَلاَ تُجْلَبُ إِلَى الْمُصَدِّقِ وَالْجَنَبُ عَنْ غَيْرِ هَذِهِ الْفَرِيضَةِ أَيْضًا لاَ يُجْنَبُ أَصْحَابُهَا يَقُولُ وَلاَ يَكُونُ الرَّجُلُ بِأَقْصَى مَوَاضِعِ أَصْحَابِ الصَّدَقَةِ فَتُجْنَبُ إِلَيْهِ وَلَكِنْ تُؤْخَذُ فِي مَوْضِعِهِ ‏.‏
ஜலப் மற்றும் ஜனப் ஆகியவற்றின் அர்த்தத்தை விளக்கி முஹம்மது பின் இஸ்ஹாக் கூறினார்கள்:

ஜலப் என்பதன் அர்த்தமாவது, கால்நடைகளின் ஜகாத் அவற்றின் இடங்களிலேயே (வசிப்பிடங்களிலேயே) சேகரிக்கப்பட வேண்டும்; அவை ஜகாத் வசூலிப்பவரிடம் இழுத்து வரப்படக்கூடாது.

ஜனப் என்பதன் அர்த்தமாவது, ஜகாத் வசூலிப்பவர் கால்நடை உரிமையாளர்களின் இருப்பிடங்களிலிருந்து வெகு தொலைவில் தங்கியிருந்து, தம்மிடம் கால்நடைகளை ஓட்டி வருமாறு செய்யக் கூடாது. மாறாக, அவை இருக்கும் இடத்திலேயே ஜகாத் வசூலிக்கப்பட வேண்டும்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் மக்தூஃ (அல்-அல்பானி)
صحيح مقطوع (الألباني)