ஸயீத் பின் அல்-முஸய்யப் அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்தாப் பின் அஸீத் அவர்களிடம், பேரீச்ச மரங்களின் ஸகாத் உலர்ந்த பேரீச்சம் பழங்களாகக் கொடுக்கப்படுவதைப் போலவே, திராட்சைப் பழங்களையும் (அவை உலர்ந்தால் எவ்வளவு உலர் திராட்சையாக மாறும் என்று) மதிப்பிட்டு, அதன் ஸகாத்தை உலர் திராட்சையாகச் செலுத்துமாறு கட்டளையிட்டார்கள்.