புஹைஸா (ரழி) அவர்கள் தனது தந்தை வழியாக அறிவிக்கிறார்கள்:
'என் தந்தை நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். (அனுமதி கிடைத்ததும்) அவர்களுக்கும் அவர்களின் மேலாடைக்கும் இடையில் நுழைந்து (அவர்களை மிக நெருக்கமாக அணைத்து), அவர்களை முத்தமிடவும் தழுவிக்கொள்ளவும் ஆரம்பித்தார்கள். பிறகு அவர்கள், 'அல்லாஹ்வின் தூதரே! எதனைத் தடுத்து வைப்பது அனுமதிக்கப்பட்டதல்ல?' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'தண்ணீர்' என்றார்கள். அவர்கள், 'அல்லாஹ்வின் தூதரே! எதனைத் தடுத்து வைப்பது அனுமதிக்கப்பட்டதல்ல?' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'உப்பு' என்றார்கள். அவர்கள், 'அல்லாஹ்வின் தூதரே! எதனைத் தடுத்து வைப்பது அனுமதிக்கப்பட்டதல்ல?' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நீர் நன்மையைச் செய்வது உமக்குச் சிறந்ததாகும் (ஆகவே, எந்த நன்மையையும் தடுப்பது கூடாது)' என்று கூறினார்கள்.