அப்துல்லாஹ் பின் `அம்ர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நாற்பது (சிறந்த) பண்புகள் (அல்லது நற்செயல்கள்) உள்ளன. அவற்றில் மிகச் சிறந்தது ஒரு பெண் ஆட்டை ‘மனீஹா’வாக (அதன் பாலைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இரவலாக) கொடுப்பதாகும். இந்த (நாற்பது) பண்புகளில் ஒன்றை, அதன் நற்கூலியை எதிர்பார்த்தும், (அல்லாஹ்வின்) வாக்களிப்பை உண்மையாக்கியும் எவர் செய்கிறாரோ, அவரை அல்லாஹ் அதன் காரணமாக சொர்க்கத்தில் நுழையச் செய்வான்.”
ஹஸ்ஸான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் ‘மனீஹா’வுக்குக் குறைவான (தரத்திலுள்ள நற்செயல்களான) சலாமுக்கு பதிலளிப்பது, தும்மியவருக்கு (யர்ஹமுகல்லாஹ் என்று கூறி) மறுமொழி கூறுவது, பாதையிலிருந்துத் தொல்லை தருபவற்றை அகற்றுவது போன்றவற்றை எண்ணிப் பார்த்தோம். ஆனால், எங்களால் பதினைந்து பண்புகளைக் கூட அடைய முடியவில்லை.”