"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'தர்மம் செய்யுங்கள்' என்று கூறினார்கள். ஒரு மனிதர், 'அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஒரு தினார் இருக்கிறது' என்று கூறினார். அவர்கள், 'அதை உமக்காகச் செலவு செய்யும்' என்றார்கள். அவர், 'என்னிடம் இன்னொன்று இருக்கிறது' என்றார். அவர்கள், 'அதை உமது மனைவிக்காகச் செலவு செய்யும்' என்றார்கள். அவர், 'என்னிடம் இன்னொன்று இருக்கிறது' என்றார். அவர்கள், 'அதை உமது பிள்ளைக்காகச் செலவு செய்யும்' என்றார்கள். அவர், 'என்னிடம் இன்னொன்று இருக்கிறது' என்றார். அவர்கள், 'அதை உமது ஊழியருக்காகச் செலவு செய்யும்' என்றார்கள். அவர், 'என்னிடம் இன்னொன்று இருக்கிறது' என்றார். அவர்கள், 'நீரே (அதை என்ன செய்வது என்று) நன்கறிந்தவர்' என்று கூறினார்கள்."