எங்களிடமிருந்த கம்பளியைக் கொண்டு அந்த (குர்பானிப் பிராணிகளுக்கான) மாலைகளை நான் திரித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே (இஹ்ராம் அணியாத) சாதாரண நிலையில் இருந்தார்கள். (இஹ்ராம் அணியாத) ஒருவர் தம் மனைவியிடம் எதைச் செய்வாரோ அதை அவர்கள் செய்தார்கள்; அல்லது ஒரு கணவன் தம் மனைவியிடம் எதைச் செய்வாரோ அதை அவர்கள் செய்தார்கள்.