حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ أَتَى عَلَىَّ النَّبِيُّ صلى الله عليه وسلم زَمَنَ الْحُدَيْبِيَةِ، وَالْقَمْلُ يَتَنَاثَرُ عَلَى وَجْهِي فَقَالَ {أَيُؤْذِيكَ هَوَامُّ رَأْسِكَ}. قُلْتُ نَعَمْ. قَالَ فَاحْلِقْ، وَصُمْ ثَلاَثَةَ أَيَّامٍ، أَوْ أَطْعِمْ سِتَّةَ مَسَاكِينَ، أَوِ انْسُكْ نَسِيكَةً . قَالَ أَيُّوبُ لاَ أَدْرِي بِأَىِّ هَذَا بَدَأَ.
கஅப் பின் உஜ்ரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா (சமயம்) என்னிடம் வந்தார்கள். அப்போது என் முகத்தில் பேன்கள் உதிர்ந்து கொண்டிருந்தன. அவர்கள், "(உன்) தலையிலுள்ள பூச்சிகள் (அதாவது, பேன்கள்) உனக்குத் தொந்தரவு தருகின்றனவா?" என்று கேட்டார்கள். நான், "ஆம்" என்றேன். அவர்கள், "எனவே (உன் தலையை) மழித்துவிடு; (அதற்குப் பரிகாரமாக) மூன்று நாட்கள் நோன்பு நோற்பாயாக; அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவளிப்பாயாக; அல்லது ஒரு பலிப்பிராணியை அறுத்துப் பலியிடுவாயாக" என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்) அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "இம்மூன்றில் எதை அவர் முதலில் குறிப்பிட்டார் என்று எனக்குத் தெரியாது."