அபூ ராஃபி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவிலிருந்து புறப்பட்டபோது, அல்-அப்தஹ்வில் (வந்து) தங்குமாறு எனக்குக் கட்டளையிடவில்லை. ஆனால், நான் (முன்னதாகவே) வந்து அங்கே அவர்களது கூடாரத்தை அமைத்தேன். பிறகு அவர்கள் வந்து தங்கினார்கள்.
குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (அபூ ராஃபி (ரழி) அவர்கள்) நபி (ஸல்) அவர்களின் பயணப் பொருட்களுக்குப் பொறுப்பாளராக இருந்தார்கள் என்று இடம்பெற்றுள்ளது.